வணக்கம்

பிழைகளை மன்னித்து புதினம் கற்பிக்கவும். நன்றி

Thursday, September 30, 2010

கொல்லிப்பாவை

வெண்ணிலவில் இரு  கருமை  கண்டேன்  
வியர்த்து  நின்றேன்  - வெறித்து , புரிந்து,  
விழித்தது  கருமையல்ல -  உன்  கரு  
விழயுருண்டைகள் என  தெளிந்து  புரிவதற்குள் ...

மூங்கில்  மரத்தின்  வழப்பு  கண்டேன் - வியந்து  
மூக்கில்  நுகர்ந்தேன்   - மரத்தின்  
முடிவில்  ஓர் துளைக்கு  பதில்   இரண்டுணர்ந்தேன் ..
முக்தி  பெற்ற  என்  அறிவுக்கு , அது  உன்  
மூக்கு  என  தெளிந்து  புரிவதற்குள் ...

பளிங்கு  படிகள்  பார்த்து , பத்து  நொடி  
பாதியானேன்  - படிகளின்  
பளீர்,  பட்டென  மறைய - மறைத்தது  உதடென  
பணிக்கும்போது , பளிங்கென  நினைத்தது  
பற்கள்  என  தெளிந்து  புரிவதற்குள்  ...
மதியொன்றை கண்டேன்  
மலைத்து  நின்றேன்  - அது  
மற்றுமொரு நாள்  மதியல்லாததனால்  ..
மலைத்து  மதியல்ல  என்  
மடந்தையின்  மாசில்லா  
முகம்  என  தெளிந்து  புரிவதற்குள் … 

என்  கனவு  முடிந்தது ... 

எண்ணம்  கரைபுரண்டோட , இன்னும்   
ஆராய்ந்து  காத்திருக்கிறேன் ..
என்னை   தொலைக்கசெய்யும் ,
வியப்பின்  விந்தையான , 
உன்  ஜனனம்  புரிய ...

ஆண்டவனின் மருஉ

நாம்  விழித்தெழுமுன்  குளித்து ,
குளியளுக்குமுன்  வழியனுப்ப  ஆயுத்தமாவாள்..

முழங்கால்  வலித்தாலும்  கனுக்கால்  கொதித்தாலும் ,
முடியும்வரை  மாடாய் வாழ்க்கை  செக்கிழுத்து...

பதியின்  பாட்டுக்கெல்லாம்  பணிவாய்  பயந்து ,
புதியவன்  புலர்ந்த  போது புதிதாய்  பிறந்து…

யாதுமாய்  நிற்க மற்றொரு உறவு  உருவாக,
யாதுமாய்  நின்ற   நீ - ஒரு வியப்புதான் 

ஆண்டவன்  தன் பேர்  மாற்றிக்கொள்ளலாம் ,
அம்மா  என்று !!!