வெண்ணிலவில் இரு கருமை கண்டேன் வியர்த்து நின்றேன் - வெறித்து , புரிந்து, விழித்தது கருமையல்ல - உன் கரு விழயுருண்டைகள் என தெளிந்து புரிவதற்குள் ... மூங்கில் மரத்தின் வழப்பு கண்டேன் - வியந்து மூக்கில் நுகர்ந்தேன் - மரத்தின் முடிவில் ஓர் துளைக்கு பதில் இரண்டுணர்ந்தேன் .. முக்தி பெற்ற என் அறிவுக்கு , அது உன் மூக்கு என தெளிந்து புரிவதற்குள் ... பளிங்கு படிகள் பார்த்து , பத்து நொடி பாதியானேன் - படிகளின் பளீர், பட்டென மறைய - மறைத்தது உதடென பணிக்கும்போது , பளிங்கென நினைத்தது பற்கள் என தெளிந்து புரிவதற்குள் ...
மதியொன்றை கண்டேன் மலைத்து நின்றேன் - அது மற்றுமொரு நாள் மதியல்லாததனால் .. மலைத்து மதியல்ல என் மடந்தையின் மாசில்லா முகம் என தெளிந்து புரிவதற்குள் … என் கனவு முடிந்தது ... எண்ணம் கரைபுரண்டோட , இன்னும் ஆராய்ந்து காத்திருக்கிறேன் .. என்னை தொலைக்கசெய்யும் , வியப்பின் விந்தையான , உன் ஜனனம் புரிய ...