வெண்ணிலவில் இரு கருமை கண்டேன்
வியர்த்து நின்றேன் - வெறித்து , புரிந்து,
விழித்தது கருமையல்ல - உன் கரு
விழயுருண்டைகள் என தெளிந்து புரிவதற்குள் ...
மூங்கில் மரத்தின் வழப்பு கண்டேன் - வியந்து
மூக்கில் நுகர்ந்தேன் - மரத்தின்
முடிவில் ஓர் துளைக்கு பதில் இரண்டுணர்ந்தேன் ..
முக்தி பெற்ற என் அறிவுக்கு , அது உன்
மூக்கு என தெளிந்து புரிவதற்குள் ...
பளிங்கு படிகள் பார்த்து , பத்து நொடி
பாதியானேன் - படிகளின்
பளீர், பட்டென மறைய - மறைத்தது உதடென
பணிக்கும்போது , பளிங்கென நினைத்தது
பற்கள் என தெளிந்து புரிவதற்குள் ...
மதியொன்றை கண்டேன்
மலைத்து நின்றேன் - அது
மற்றுமொரு நாள் மதியல்லாததனால் ..
மலைத்து மதியல்ல என்
மடந்தையின் மாசில்லா
முகம் என தெளிந்து புரிவதற்குள் …
என் கனவு முடிந்தது ...
எண்ணம் கரைபுரண்டோட , இன்னும்
ஆராய்ந்து காத்திருக்கிறேன் ..
என்னை தொலைக்கசெய்யும் ,
வியப்பின் விந்தையான ,
உன் ஜனனம் புரிய ...
No comments:
Post a Comment