வேலை வேலை என ,
விரைந்து ...
வியர்த்து ...
சுற்றம் மறப்பாய் ;
சூரியன் மறப்பாய் ;
தோழர்களோடு
வட்டமிட்டு வன் புகழ்ந்து
வயிறு வலிக்க நகைத்த காலங்களை
தற்போது ,
விடியற்காலை உணவு இடைவேளையில்
மனதில் அவ்வுணர்வுமாய் ,
வாயில் சத்தில்லா அவ்வுணுவுமாய்
அசைபோடுகின்றாய்..
காலை பத்திற்கு உயர்ந்து ,
பன்னிரெண்டுக்கு ஓட துவங்கும்போது ,
அம்மாவின் அச்சமும் ;
அப்பாவின் அறிவுரைகளும் ;
சகோதர கண்களின் சோகமும்
உன்னால் உணரமுடிந்ததா , தெரியவில்லை..
பின் ஒரு நாளில் ;
மணமுடிந்து மணமுடித்தவனும் அவ்வண்ணமே இருக்க ,
மனதார பரிமாற பல உள , இருந்தும் ;
பணியும் அவ்வண்ணமே , பல !
ஒருநாள் ஓட்டம் தவிர்த்து பார்த்தபோது ,
வியப்பாய் ;
ஏக்கமாய் ;
எதிர்பார்ப்பாய் ; பல கண்கள் !!!
Nice .... it true in now days life ...
ReplyDelete