வணக்கம்

பிழைகளை மன்னித்து புதினம் கற்பிக்கவும். நன்றி

Monday, April 22, 2019

மங்கை மான் விழி அம்புகள் !!




மஞ்சள் தன்னில்  தஞ்சம் கொண்ட
தஞ்சை பாவை முகமோ கொஞ்சும்,
நஞ்சை  கூந்தல் கெஞ்சும் பூக்கள்
நன்மை கோர இம்மை முடியும்,
பஞ்சும் சிவக்கும் வெட்கம் கொண்டு
மஞ்சம் எய்து கலவி காண,
மிஞ்சும் தீயே பஞ்சம் கேட்க -பிர
பஞ்சம் தேடி விண்வெளி மேய்ந்து
எஞ்சியுள்ள உலகம் சொல்லும் -செம்
மஞ்சள் வானம் வெண்மையாகும்!!
ம(ய)ங்கும் விழிகளுரைக்கும் அஞ்சல்
கொஞ்சல் காதல்,காதல் அஃதே!!


No comments:

Post a Comment